(அஷ்ரப் ஏ சமத்)

ஜனாதிபதி கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சா் என்ற ரீதியில் டயஸ்போரா தமிழ் தொண்டா் நிறுவனங்கள் 6 நிறுவனங்களின் தடையை நீங்கியிருந்தாா். இதனை வரவேற்பதோடு, முஸ்லிம் சமூகத்தில் சமூகங்களுக்கு சேவை செய்யும் கல்வி மத ரீதியாக உள்ள 11 நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அதனை அவா்களது நடவடிக்கைகளை பரிசீலித்து தடையை நீக்கும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என அமைச்சா் நசீர் அஹமட் தெரிவித்தார்.

இன்று (17) புதன்கிழமை அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் என்னால் எழுப்பட்டக் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

அவா் தொடந்து கருத்து தெரிவிக்கையில், 

உதாரணமாக பரகதெனியாவில் உள்ள அரபிக் கல்லூரி முஸ்லிம் அநாதை மாணவா்களின் கல்விக்கு, பல்கலைக்கழக மாணவா்கள் கல்வி வசதிகளுக்கு மாதாந்தம் புலமைப் பரிசில், குடிதண்ணீர், வீடு கட்டுதல் போன்ற திட்டங்களை கடந்த 40 ஆண்டுகாலமாக செய்து வந்தனா். அந்த நிறுவனத்தினைக் கூட பாதுகாப்பு அமைச்சின் ஊடாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தினா் கடந்த வருடம் உயா் நீதிமன்றில் வழக்குத் தாக்குதல் கூட செய்துள்ளனா். 

இவ்வாறான நிறுவனங்களுக்கு ஒரு சிலா் தமது ஸக்காத் நிதியை வழங்கி வந்தனா். அதனை 1000க்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு மாதாந்தம் 1500 ரூபா வீதம் வழங்கி வந்தனர்.

இவ்வாறான நிறுவனங்களின் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சா் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தாா்.

அத்துடன் சர்வகட்சி ஆட்சியில் எதிா்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட சிறிய கட்சிகளான ரவூப் ஹக்கீம், அதாவுல்லாஹ், றிசாத் பதியுதீன் எல்லோரும் ஒன்றிணைந்து சர்வகட்சியில் இணைந்து இந்த 2 வருடத்தில் மக்களுக்கு செய்யக்கூடிய சேவைகளைச் செய்ய வருமாறும் அழைப்பு விடுகின்றோம். 

தற்போதைய அமைச்சுக்கள் மாற்றப்படலாம். அதனை விடுத்து உலக நாடுகளில் சர்வ கட்சி ஆட்சி முறை அரசாங்கம் இருக்குமானால் உலக நாடுகள் எமது நாட்டுக்கு உதவக் கூடும். கடந்த ஜனாதிபதி கூட எதிா்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாஸவுக்கு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

நாட்டு மக்கள் இருக்கும் தற்போதைய நிலையில் அரசியல் வேறுபாடு கொள்கைகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு மக்களின், நாட்டின் பொருளாதாரம், முறை மாற்றம் என்பவற்றை கருத்திக் கொள்ளல் வேண்டும். 

எதிா்கட்சித் தலைவா் சொல்வது போன்று நாம் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தலுக்கு போவதென்பது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள், மக்களது வாழ்க்கைச் செலவு மேலும் மோசமடையலாம். தேர்தலுக்குப் போக முன் இருக்கும் மிகுதி 1 வருடமாவது ஜனாதிபதியுடன் இணைந்து செல்வது சிறந்ததாகும் எனவும் அமைச்சா் நசீர அஹமட் தெரிவித்தாா்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.