இலங்கையில் ரபீஉல் அவ்வல் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை

Rihmy Hakeem
By -
0

 


உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2022 செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை செவ்வாய்க்கிழமை இரவு ஹிஜ்ரி 1444 ரபீஉனில் அவ்வல் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை. 

அவ்வகையில், ஹிஜ்ரி 1444 ஸபர் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2022 செப்டம்பர் 28 ஆம் திகதி ஹிஜ்ரி 1444 ரபீஉனில் அவ்வல் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)