பேராதனை பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையில் கடந்த வாரம் (14) இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் குழுவினால் சட்டப் பட்டதாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மாணவர்கள் இன்று பேராதனை பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் கலைப் பீடத்தின் 4ஆம் வருட மாணவர்களான 24 வயதுடைய தலேலிய, அம்பலாங்கொடை மற்றும் துன்மோதர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

சம்பவம் தொடர்பான வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.