தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நீண்ட நாட்களாக காணப்படும் வெற்றிடத்துக்கு ஏ.எம்.நஹியாவை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரை தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. பாராளுமன்றப் பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று புதன்கிழமை (07) கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேசிய எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னராக முன்னர் செயற்பட்ட இவர், ஒய்­வு­பெற்ற இலங்கை நிர்­வா­க ­சேவை அதி­கா­ரியுமாவார்.

பொது­நி­ரு­வாக உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சின் எல்லை நிர்­ண­யக்­ கு­ழு­விலும் உள்­ளூ­ராட்சி, மாகா­ண­ ச­பைகள் அமைச்சின் எல்லை நிர்­ண­யக்­ கு­ழு­விலும் உறுப்­பி­ன­ராக பணி­யாற்­றிய நஹியா, எல்லை நிர்­ணய விவ­கா­ரங்­களில் மிகுந்த அனு­ப­வ­மு­டை­யவர்.

அர­ச ­சே­வையில் பணி­யாற்­றிய காலத்தில் புனர்­வாழ்வு பணிப்­பாளர் நாய­க­மா­கவும், மீனவர் வீட­மைப்பு மற்றும் மீனவர் நலன் பணிப்­பாளர் நாய­க­மா­கவும், தேசிய நீர்­வ­ழங்கல், வடி­கா­ல­மைப்பு அமைச்சின் நிபு­ணத்­துவ ஆலோ­ச­க­ரா­கவும், அதற்கு முதல் கொழும்பு ஸாஹிரா கல்­லூரி உப அதி­ப­ரா­கவும், இந்து சமய கலா­சார இரா­ஜாங்க அமைச்சின் தமிழ் அலு­வல்கள் உத­விப் ­ப­ணிப்­பா­ள­ர் போன்ற பல முக்கிய பத­வி­களை இவர் வகித்­துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.