முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளார். 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச  விமான நிலையத்தில் சற்று முன்னர் கோட்டாபய ராஜபக்ஸ தரையிறங்கினார்.

தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவரை வரவேற்க அமைச்சர்கள் பலரும் விமான நிலையத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விமான நிலையத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.