இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது.

300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி வெளியிடப்பட்டது.

எனினும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தற்போது திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாசனை திரவியங்கள் உள்ளிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.