இன்று 24.09.2022 சனிக்கிழமை காயாங்கேணி கடற்கரையில் கல்குடா டைவர்ஸ் அணியில் ஏற்பாட்டில் “ஶ்ரீலங்கா லைப் காட்” வழிகாட்டலுடன் இளைஞர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சி நெறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது ஆர்வமுள்ள இளைஞர்கள் நீச்சல் பயிற்சியை கற்றுக் கொள்வதற்காக வருகை தந்திருந்தனர்.

இந்நிகழ்வு காலை 7:30 தொடக்கம் மதியம் 12.00 மணிவரை இடம் பெற்றது இந்நிகழ்வை அமைப்பின் ஏற்பாட்டாளர்களும் சமூக சேவை உதவியாளர்களுமான நியாஸ் ஹாஜியார், தொழிலதிபர் ஹிப்ஜாத் மற்றும் ஜௌபர் மெக்கானிக் ஆகியோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் “கல்குடா டைவர்ஸ்” அணியின் விஷேட சுழியோடி அப்துல் மஜீத் ஹலீம் கலந்து கொண்டவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளை வழங்கினார்.

பங்குபற்றிய அனைவருக்கும் நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவம் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்பன தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது.

அத்தோடு, அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் நீர் அனர்த்தங்களின் போது நீரில் மூழ்குபவர்களை மீட்கும் பணிகளையும் குறித்த கல்குடா டைவர்ஸ் அணியினர் களத்தில் நின்று பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது மேலும் எதிர்வரும் காலங்களில் இன்னும் சிறப்பான முறையில் அதிகமான இளைஞர்களுக்கு நீச்சல் மற்றும் உயிர்காக்கும் பயிற்சி நெறிகளை வழங்கவுள்ளதாகவும் இவ்வமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.