நிலக்கரி கொள்வனவுக்கான குறுகிய கால தேவைக்கான டெண்டர்கள் சர்வதேச போட்டி விலைக்கு ஏற்ப நடத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலக்கரி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத எந்தவொரு தரப்பினரும் இந்த விநியோகத்தில் பங்கேற்க முடியும். 180 நாட்கள் குறைந்தபட்ச கடன் காலத்துடன் விநியோகம் முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீண்ட கால டெண்டரும் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.