முதலாம் தவணை விடுமுறை

2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்றுடன்  முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் இன்று  முதல் ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டு செப்டம்பர் 13 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும்.

இரண்டாம் தவணை செப்டம்பர் 13ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2ஆம்  திகதி முதல் 2023 ஜனவரி முதல் வாரம் வரை மீண்டும் விடுமுறை அளிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு | School Holidays Sri Lanka Second Term Leave

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நிலைமை மற்றும் எரிபொருள் பிரச்சினை என்பவற்றின் காரணமாக பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் அவ்வப்போது இடைநிறுத்தப்பட்டன.

அதன்படி, இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

பரீட்சைகள்

விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு | School Holidays Sri Lanka Second Term Leave

இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 2022 டிசம்பர் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2022 டிசம்பர் 5 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.