மே/கம்/ கஹடோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் அல்ஹாஜ் பஸால் ஆப்தீன் - மூன்று மாடி கட்டட திறப்பு நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் அதிபர் சர்ஜூன் மொஹமட் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ATG gruop of company இன் முகாமைத்துவ பணிப்பாளர் அல்ஹாஜ் பஸால் ஆப்தீன் கலந்துகொள்வார்.

 விசேட அதிதிகளாக கம்பஹா வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ. அனுர பிரேமலால், ATGயின் திட்ட பணிப்பாளர் ஜமால் ஆப்தீன், கம்பஹா கல்வி வலய தமிழ் மொழி பாடசாலைகளுக்கான பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.டி.எம்.தௌஸீர், அத்தனகல்ல கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.எல்.ஜி.ஐ.ப்ரியங்கனி உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். - Siyane News 



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.