கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சமபோஷ பக்கெட்டை திருடிய குற்றச்சாட்டில் 51 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் உள்ளிட்ட 06 சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை, அவர்கள் 22 முதல் 29 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்கின்றமை மற்றும் விசாரணை ஓரளவு முன்னெடுக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல விடயங்களை கருத்திற்கொண்டு பிணை வழங்க தீர்மானித்ததாக நீதவான் கூறியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேலதிமாக வாக்குமூலங்களை பெறுவதற்கும் அவர்களது வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி தரவுகளை பெற்றுக்கொள்வதற்கு பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கும் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.