கழிவு நீர் கால்வாயில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயதான பாடசாலை சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் பகுதியில் கழிவு நீர் கால்வாயொன்றுக்கு அருகில் பாடசாலை பை ஒன்று இருப்பதனை கண்ட மக்கள், மேற்கொண்ட தேடுதலில் கால்வாயில் பாடசாலை சிறுவன் சிக்குண்டு இருப்பதனை கண்டறிந்தனர்.

இதனையடுத்து, குருநாகல் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைககளில் குறித்த சிறுவன் மீட்கப்பட்டு சிகிக்கைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.