(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கையில் உள்ள நோலிமிட் ஆடை அலங்கார விற்பனை நிலையத்தின் புதிய  கிளை ஒன்று நேற்று (17) துபாய் நகரத்தில் அல் ஹூராய்ர் விற்பனைத் தொகுதியில் இலங்கை நோலிமிட் முகாமைத்துவ பணிப்பாளா் முபாரக் ஹாஜியார் மற்றும் அவரது புதல்வா் ஹாபீஸ் ஆகியோா்களினால்  திறந்து வைக்கப்பட்டது. 

இதனால் இலங்கையா் 50 இளைஞா் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பும் கிட்டியுள்ளது. இத் திட்டத்தினால் இலங்கையா் வெளிநாட்டில் முதலிட்டுள்ளாா். இதன் வருமானங்கள் அன்னியச் செலவாணிகள் இலங்கைக்கு கிடைக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இலங்கையா் ஒருவா் ஆடைத் தொழிற்சாலை மற்றும் ஆண், பெண்,சிறுவா் ஆடை அலங்காரத்துறையில் துபாயில் முதலிட்டு திறந்துவைத்துள்ள முதலாவது சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.