கலாசார அலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடாத்தி வரும் கலாபூஷண விருதுவிழாவின் 38ஆவது  கலாபூஷண விருது விழாவிற்காக முஸ்லிம் கலைஞர்களை தெரிவு செய்யும் பணி இத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனவே இத்தெரிவினை மேற்கொள்ள   மாவட்ட /பிரதேச செயலகத்தினூடாக இவ்விருதிற்கு தகுதியான 2022.12.15 திகதி 60 வயது பூர்த்தியாகின்ற கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை திணைக்களம் கோருகின்றது.

இவ்விண்ணப்பப்படிவத்தினை எமது இணையத்தளத்தில் https://muslimaffairs.gov.lk/en/downloads/applications/ மூலம் தரவிரக்கம் செய்து, விண்ணப்பப்படிவத்தினை பூர்த்திசெய்து 2022.11.04 ஆம் திகதிக்கு முன் திணைக்களத்திற்கு கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வைக்குமாறு தயவாய்  கேட்டுக்கொள்கின்றேன்.

எமது மாவட்ட /பிரதேச செயலகத்திலுள்ள கள உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இப்றாஹீம் அன்ஸார்

பணிப்பாளர்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.