கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ‘கோ பங்கி’ நிறுவனத்திற்கு இடையே கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங்கை தொடங்கும் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ‘கோ பங்கி’ நிறுவனத்திற்கு இடையே கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங்கை தொடங்கும் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

அதன்படி, தாமரை கோபுரத்தில் இருந்து பங்கீ ஜம்பிங் 2023 ஜனவரி 1ம் திகதி முதல் தொடங்கப்படும்.

கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவத்தின் பிரதான நிறைவேற்றதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, இது இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார்.

350 மீட்டர் உயரத்தில் இருந்து பாய்ச்சல் இடம்பெறும் என்றும் ஒவ்வொரு நாளும் சுமார் 130 பாய்ச்சல்களை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் இற்றில் தாமரை கோபுரம் ஒளிரும் போது, ​​இரவு நேரத்தில் 30-40 பாய்ச்சல்கள் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார் .
தாமரைக் கோபுரத்தை வருமானம் ஈட்டும் ஒன்றாக மாற்றும் முயற்சிகள் தற்போது இடம்பெற்று வரும் வேளையில் இது இலங்கையின் சுற்றுலாத்துறையின் புதிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகின்றது.

கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவத்தின் பிரதான நிறைவேற்றதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, இது இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார்.

350 மீட்டர் உயரத்தில் இருந்து பாய்ச்சல் இடம்பெறும் என்றும் ஒவ்வொரு நாளும் சுமார் 130 பாய்ச்சல்களை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் இற்றில் தாமரை கோபுரம் ஒளிரும் போது, ​​இரவு நேரத்தில் 30-40 பாய்ச்சல்கள் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார் .
தாமரைக் கோபுரத்தை வருமானம் ஈட்டும் ஒன்றாக மாற்றும் முயற்சிகள் தற்போது இடம்பெற்று வரும் வேளையில் இது இலங்கையின் சுற்றுலாத்துறையின் புதிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகின்றது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.