எத்தனை தடைகள் வந்தாலும் நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக குழந்தைகளுடன் இணைந்து தொடர்ந்து போராடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அங்கு கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் செல்வி ரஷ்மினி விஹங்கா,
“கடந்த 9ம் திகதி கையில் குழந்தையை பார்த்த என் கணவர் என்னை தாக்கினார்.யார் என்ன சொன்னாலும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தெருவில் இறங்குகிவோம்.அவர்களுக்கு பருப்பு, சோறு கூட கொடுக்க வழியில்லை. அவர்களுக்கு பால் மா கொடுக்க வழி இல்லை . அந்த பிரச்சனைகளால் தான் நாங்கள் தெருவில் இறங்கினோம். குழந்தைகளை இவ்வளவு நேரம் தூரம் அழைத்துச் சென்றோம். அவர் தெருவில் இறங்கவில்லை.”
கருத்துரையிடுக