சுகயீனம் காரணமாக தனியார் மருத்துவ மனையில் மருந்து உட்கொண்ட 11 வயது குழந்தை மருந்தி விஷமானதால் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பேருவளை வளத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த பேருவளை வளத்தறை கனிஷ்ட கல்லூரியில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் விதுஷா ரந்துனு என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி பேருவளை அம்பேபிட்டிய பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவ நிலையம் ஒன்றில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின்னர், ஒவ்வாமை காரணமாக, குழந்தையின் பெற்றோர் குழந்தையை பேருவளை நகரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

குழந்தையை சிகிச்சைக்காக இன்னுமொரு தனியார் மருத்துவ மனைக்கு மீண்டும் அழைத்துச் செல்ல பெற்றோர் முடிவு செய்தனர்.

அங்கு குழந்தைக்கு மேலும் சில மருந்துகள் கொடுக்கப்பட்டதுடன் குழந்தையின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக பெற்றோர்கள் குறிப்பிட்டனர்.

அதன் பிரகாரம், குழந்தையை பேருவளை ஆரம்ப வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், அங்கு குழந்தையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி, குழந்தையை களுத்துறை போதனா பொது வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பின்னர் களுத்துறை போதனா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று (12) மாலை திடீரென உயிரிழந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலை திறந்த தீர்ப்பை அறிவித்துள்ளதுடன் குழந்தையின் உடல் உறுப்புகளை மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்க வைத்தியசாலை அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், துரதிஷ்டவசமாக உயிரிழந்த குழந்தையின் சடலம் தற்போது அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.