உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு, கோட்டே, கொடுபெம்ம ஈரநிலப் பூங்கா நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் நாளை (31) காலை 9.30 மணிக்கு ஈரநிலப் பூங்கா  கேட்போர் கூடத்தில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த ஈரநிலப் பூங்கா உலக வங்கியின் உதவியுடன் 2018 நவம்பர் மாதம் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்டது. இதற்காக ஏறக்குறைய 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 25, 2018 அன்று, டுபாயில் நடைபெற்ற ஈரநிலங்கள் தொடர்பான 13வது ரம்சா மாநாட்டில் கொழும்பு நகரம் ரம்சா ஈரநிலமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி பெத்தகான ஈரநில பூங்கா, தியசரு ஈரநில பூங்கா, ஹீன் கால்வாய் ஈரநில பூங்கா, கொலன்னாவ ஈரநில பூங்கா, கோட்டே மாதின்னாகொட ஈரநில பூங்கா, முல்லேரியா ஈரநில பூங்கா, தலங்கம ஈரநில பூங்கா ஆகியவை இந்த ரம்சா ஈரநிலங்களுக்கு சொந்தபூங்காவாகும்.

கோட்டே, கொடுபெம்ம ஈரநிலப் பூங்காவின் மொத்த பரப்பளவு 14 ஹெக்டேயர் ஆகும். இது பெத்தகான, ஈரநில பூங்காவின் தொடர்ச்சியாகும்.

கோட்டே, கொடுபெம்ம ஈர நிலப் பூங்காவின் முதன்மை நோக்கம் பெறுமதி வாய்ந்த ஈரநிலச் சூழலைப் பாதுகாத்து, சேதத்தை குறைப்பதற்கும், சூழலுக்கு உகந்த சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளுக்கான பூங்காவாக இதைப் பயன்படுத்துவதற்கும் நிலைபேறான அபிவிருத்தியை மேற்கொள்வதாகும்.

பல நீர்வாழ் விலங்குகள், பறவைகள் மற்றும் பிற பாலூட்டிகளுக்கு உயிர் கொடுக்கும் ஈர நிலம் இது. வண்ணத்துப்பூச்சிகள், டிராகன்ஃபிளைகள்(தும்பிகள்) பல்வேறு வகை மீன்கள், பறவைகள் மற்றும் மீன் பிடிப் பூனைகள்  போன்ற பல்வேறு விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இங்கு விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களை அவதானிப்பதன் மூலம் அறிவைப் பெற முடியும். இங்கு பறவைகளை பார்க்கும் இடமும் கட்டப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்காக நடைபாதை மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவின் அனைத்து வடிவமைப்புகளும் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் பட்டய நிலப்பரப்பு கட்டிடக்கலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்டுமான இயந்திரங்களும்  பயன்படுத்தாமல் கட்டமைக்கப்பட்டுள்ளது சிறப்பானது.

மேலும் உலக நகரங்கள் தினத்தை கொண்டாடும் வகையில், நாளை 31ஆம் திகதி முதல் வாரத்தில் ஒரு நாள் சைக்கிளில் வேலைக்குச் செல்லும் திட்டத்தையும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்பாடு செய்துள்ளது.

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் "சைக்கிள் வெள்ளி - சைக்கிளில் வேலைக்குச் செல்வோம்"என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பணியாளர்கள் துவிச்சக்கர் வண்டியில் பணிக்கு வருவதற்கு வசதி செய்து தரப்படும் என்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் ஆரம்ப விழா நாளை காலை 8.15 மணிக்கு பத்தரமுல்லை செத்சிறிபாய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வளாகத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் வேலைக்குச் செல்லும் ஊழியர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி நகர அபிவிருத்தி அதிகார சபையின் துவிச்சக்கரவண்டி மன்றத்தின் அங்கத்தினருக்கு  பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிடுகின்றது.

மிதிவண்டியில் பணிக்கு வரும் ஊழியர்களின் சைக்கிள்களை நிறுத்துவதற்கு அமைச்சின் வளாகத்தில் தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மிதிவண்டியில் வேலைக்குச் செல்லும்போது ​​அந்த ஊழியர்களை இலகுவான  ஆடைகளை அணிந்து வேலைக்கு வர  அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கு மேலதிகமாக  உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு மரம் நடும் திட்டமும் அமுல்படுத்தப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

முனீரா அபூபக்கர்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.