விக்டோரியா நீர்த்தேக்க அணையை சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி ட்ரோன் மூலம் காட்சிகளை படம் பிடித்த 7 பேரை ராணுவ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வெலிகம மற்றும் தெஹிவளை பிரதேசங்களில் வசிக்கும் குழுவினர் கைது செய்யப்பட்டு பின்னர் தெல்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

குறித்த குழுவினர் சுற்றுலாவிற்கு வந்த குழுவினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.