இரத்தினபுரியை சேர்ந்த இளைஞர் ஒருவரது முகத்தில் காணப்பட் பெரிய பிறப்படையாள மச்சம் ஒன்றை பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கிய சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு இந்த இளைஞனின் முகத்தில் பிறப்பில் இருந்து காணப்பட்ட அந்த அடையாளத்தை மாற்ற அவரது தொடையில் இருந்து தோல் வெட்டியெடுக்கப்பட்டே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இளைஞர் தற்போது உடல் தேறி வருகின்றார்.

இலங்கையில் இவ்வாறு மேற்கொள்ளப்படும் முதலாவது சத்திர சிகிச்சை இது என்பதோடு இலங்கையின் மருத்துவத் துறையின் ஒரு கீர்த்தி அடையாளமாக இது பார்க்கப்படும் என்றும் நம்பப் படுகின்றது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.