(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் எப்.எம். வழங்கி வரும் பொன் மாலைப் பொழுது 3 ஆண்டாகவும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளா் , எஸ்.பி.பி. புகழ் பாடகர் மற்றும் அறிவிப்பாளா் மொஹமட் இர்பான் தலைமையில் நேற்று 30.10.2022  நடைபெற்றது.

இந் நிகழ்வில் சூர்யாவின் இசையில் பிரபல பாடகா்கள், பாடகிகள் சினிமாப் பாடல்களை பாடினாா்கள்.  

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அல்ஹாஜ் எம்.டி.இக்பால், தினகரன் பிரதம ஆசிரியா் செந்தில் வேலவர், சிரேஷ்ட அறிவிப்பாளா் சிவரஞ்சன் யோகராஜன், கலாநிதி கையும் உட்பட  பல வர்த்தகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் இசைக்கலைஞா்கள், அனுசரணையாளா்கள் பொன்னாடை மற்றும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டாா்கள்.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.