வசந்த முதலிகே,குணதிலக்க ஹஷான் ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும்,அரச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எவ்வாறான அரச விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

தற்போது வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,சிறையிலிருந்து அவரை இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதான செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டுக்கு எதிரான மனித உரிமைப் பிரேரணைகளுக்கு அரசாங்கமே உத்வேகம் அளிப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மாணவர் போராட்டங்கள் தாக்கப்படுவது அதை இலக்காகக் கொண்டா எனவும் கேள்வி எழுப்பினார்.தீவிரவாதத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்த  எதிர்க்கட்சித் தலைவர்,பயங்கரவாதம் என்ற பெயரில் அப்பாவி மக்களை சிறையில் அடைப்பதை தாம் முற்றிலும் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.