(ஷாம் மௌலானா)

பரகஹதெனிய  ஜாமிஉல் அன்வர் ஜும்மா பள்ளிவாசலில் மீலாத் நபி விழா கடந்த திங்கட்கிழமை (24) பரிபாலன சபை தலைவர் அல் ஆலிம் அல் ஹாபிழ் எம் ஜெஸ்மின் ரஹ்மானி தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதித் தலைவர் அஷ்ஷேக் கலாநிதி எச் உமர்தீன் (ரஹ்மானி), சிறப்பு அதிதியாக பிரபல பேச்சாளர் பாசிர் மொஹிடீன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். மேற்படி விழாவில்

குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் நிகழ்ச்சிகளுடன் பரகஹதெனியவைச் சேர்ந்த  பல்துறை சார்ந்த சாதனையாளர்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.