ரயில் பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக இன்றிரவு 8.30 முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை களனிவௌி மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
இதற்கமைய, கொஸ்கம முதல் அவிசாவளை வரையான ரயில் பாதை மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து கொஸ்கம வரை மாத்திரமே ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.
கருத்துரையிடுக