கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற 4 ஆம் தர மாணவர்களின் வாசிப்பு பாசறையின் நீட்சியாக கஹட்டோவிட்டவில் அல்ஹாஜ் எம்.இசட்.அஹ்மத் முனவ்வர் தலைமையில் சிறப்பாக இயங்கி வரும்  முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) வாசிகசாலையில் மாணவர்கள் அங்கத்தவர்களாக இணைக்கப்பட்டனர்.

 வகுப்பாசிரியர்களான பஹீமா ஜஹான், ஸன்பானியா பஷீர், ரிஹானா அபு ஹனிபா ஆகியோரின் வழிகாட்டலில் அங்கு சென்ற 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் MLSC  நிர்வாகத்தினரால் இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டு பல மாணவர்கள் அங்கத்தவர்களாக இணைக்கப்பட்டனர்.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.