தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டைகள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றினை வௌியிட்டுள்ளது.

மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரு வருடங்களின் போது, விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்ட போதிலும் , இம்முறை பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகளின் வருகை பதிவு ஆவணத்தின் மூலம் பரீட்சைக்கு சமூகமளித்தமை உறுதிப்படுத்தப்படும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.