இலங்கை - அரேபியா தொடர்புகள் பற்றிய ஆய்வுக்கு" அரச இலக்கிய  விருது பெற்ற இளம் ஆராய்ச்சியாளரால் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம்  பெரும்மிதம் அடைகிறது. - உபவேந்தர் றமீஸ் அபூபக்கர்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறையின் வரலாற்று பிரிவு விரிவுரையாளர் எச்.எப்.பிர்தெளசியா நேற்று (28) பண்டாரநாயக்க ஞாபகர்த்த  சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)  அரச இலக்கிய விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சமூக விஞ்ஞானத் துறையின் விரிவுரையாளர் எச்.எப்.பிர்தெளசியா அரச இலக்கிய  விருது வழங்கும் விழாவில் சிறந்த மொழி பெயர்ப்பு புலைமைத்துவ ஆய்வுகள் இலக்கியத்துக்கான" விருதினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கது.

இவ்விருது அவரால் சிங்கள மொழிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட " இளம் பிறையும் இடைத்தராசும்" இலங்கை - அரேபியா தொடர்புகள் பற்றிய ஆய்வு" எனும் நூலுக்காக வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

அதிக ஆராய்ச்சியாளர்களை உருவாக்க தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வெற்றியடைத்து வருவதுடன், எதிர்காலத்தில் பல மைல்கற்களை அடையும் என்று உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மனதார வாழ்த்தி, இன்னும் எதிர்காலத்தில் இதுபோன்ற பல ஆய்வுகளை செய்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.