அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம்

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக தமது கட்சிக்கு அறிவிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த முற்போக்கு தொழிற்சங்க கிளை சங்கத்தின் நற்காரியங்கள் வேலைத்திட்டத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த தனியார்மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் உரிய விழிப்புணர்வு தேவை என அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.