சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான டிமெரிட் முறையை அறிமுகப்படுத்துவதை துரிதப்படுத்துவது தொடர்பில் இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்க தேவையான அட்டைகள் இல்லாததால், கடந்த காலங்களில் அனுமதிப்பத்திரம் வழங்குவது நிறுத்தப்பட்டு இருந்தது , தற்போது வழங்க தேவையான அட்டைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, அனுமதிப் பத்திரங்களை துரிதமாக வழங்குவது குறித்தும், எழுத்துத் தேர்வு நடத்துவதற்கும், செயன்முறைத்தேர்வுகளை மேற்கொள்வதற்கு நிகழ்நிலைத் தொழில்நுட்பத்துடன் மோட்டார் வாகனத் துறை மாவட்ட அலுவலகங்களை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கருத்துரையிடுக