தமிழக திரைப்பட நடிகர் சூர்யாவின் எதிர்பார்க்கப்படும் சூர்யா - 42 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இருப்பதாக தகவல்கள் இலங்கையிலும் இடம்பெற வெளியாகியிருக்கின்றன.
நியூஸ் - 18 என்ற இந்திய செய்தித்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கோவா - சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்புக்களுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் மத்தியிலேயே,
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையின் வனப்பகுதிகளில்
இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா - 42 திரைப்படம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கதையை கொண்டிருக்கும் என சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திரைப்படத்தின் கதாநாயகியாக பொலிவூட் நடிகை திரிஷா பதானி நடிக்கவுள்ளார்.
2023ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையவுள்ளன.
ஐரோப்பாவின் பல்கேரியா - செர்பியா போன்ற நாடுகளும், கம்போடியா - வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிஜி ஆகிய நாடுகளிலும் மூன்று நாடுகள் படப்பிடிப்புக்காக தெரிவு செய்யப்படவுள்ளன.
பாரிய நிதி செலவில் தயாரிக்கப்படும் இந்தப்படத்தில் சூர்யா 5 கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்.
இரண்டு பாகங்களாக 10மொழிகளில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது.