கொழும்பின் பல பிரதேசங்களில் நாளை(02) இரவு 10 மணி முதல் மறுநாள் நண்பகல் ஒரு மணி வரை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென சபை கூறியுள்ளது.

எனவே தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அம்பதலே எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்புடைய அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.