(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் (துபாய்) நாட்டின் 51வது தேசிய தினம் டிசம்பா் 01.12.2022  கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில்  ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான துாதுவா்  காலித் நசாா் அல்மிரி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சா் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டாா்.  இந்நிகழ்வில்  கபினட் அமைச்சா்கள், இராஜாங்க அமைச்சா்கள், பாராளுமன்ற உறுப்பிணா்கள், இலங்கையில் உள்ள ஏனைய நாடுகளின் தூதுவா்களும்  கலந்து சிறப்பித்தனா். 51வது தேசிய தின கேக்கும் தூதுவா் மற்றும் பிரதம அதிதிகளினால் வெட்டிப் பரிமாறப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஐக்கிய அரபு இராச்சியத்தின்  தூதுவா்,

இலங்கை - துபாய் வர்த்தகம் ஊடாக 2020 மற்றும் 2021 19 மில்லியன் அமேரிக்க டொலா்களை முதலிட்டுள்ளது. அத்துடன் ஏற்றுமதி இறக்குமதியில் 2.7 பில்லியன் அமேரிக்க டொலா்கள் இரு நாடுகளுக்கிடையில் பரிமாற்றம் நடைபெற்றுள்ளன.

 துபாய்  நாட்டின்  உலா்உணவு உதவித் திட்டத்தின் கீழ்  6,867 குடும்பங்களும் 35,000 தனிப்பட்ட நபா்களும் நன்மையடைந்துள்ளனா். அத்துடன் இலங்கை மற்றும் எமிரேற்ஸ் விமான சேவைகள் மத்திய கிழக்கு ஏனைய நாடுகளுக்கு சுற்றுலாப்பிரயாணி ஏற்றிவருவதில் ஐக்கிய அரபு இராச்சியம்  இலங்கைக்கு விமான சேவையிலும் சேவைகளை செய்து  வருகின்றது. 70க்கும் மேற்பட்ட நாடுகள் மின்சக்தி மற்றும் மங்குரே அலயன்ஸ் காலநிலைத் திட்டத்தினை இணைந்து கொண்டு அன்மையில் அமுல்படுத்தியது.  அபு துபாயில் உலக செயற்கையிலான பல்கலைக்கழகமொன்றை நிர்மாணித்துள்ளது. உலகின் ஒரு கேந்திர நிலையமாக துபாய் இயங்கி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.