தூசி துகள்கள் இன்னுமொரு வாரத்திற்கு

இந்த தூசி துகள்கள் வளிமண்டலத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு இருக்கும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) கலாநிதி சஞ்சய் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியா ஊடாக இந்த நாட்டிற்கு வரும் காற்றின் வேகம் ஓரளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண்ணின் படி, கொழும்பில் உள்ள தூசி துகள் அளவு (US AQI) நேற்று (13) காலை 166 ஆக உயர்ந்துள்ளது.

அந்த மதிப்பு சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது, அது ஒரு ஆரோக்கியமற்ற நிலை. நேற்று (13) இந்த மதிப்பு 126 ஆக காட்டப்பட்டது.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் படி, தூசி துகள்கள் உட்பட பாதகமான காற்றின் தர அளவுருக்கள் கண்டி நகரில் 137 ஆகவும், கேகாலை நகரில் 134 ஆகவும், குருநாகலில் 134 ஆகவும், பதுளையில் 114 ஆகவும், புத்தளத்தில் 109 ஆகவும் அதிகரித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, உணர்திறன் மற்றும் சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது..

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.