இந்தியப் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எழுதிய "நபிகளாரின் சமூக உறவு" நூல்  இன்று
கொழும்பில் வெளியீடு

தமிழக சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எழுதிய "நபிகளாரின் சமூக உறவு" நூல் வெளியீட்டு விழா கொழும்பு, 310 டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இடம் பெறும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில், போரத்தின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான கலாபூஷணம் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

மூஸான் இன்டர்நெஷனலின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஸ்லிம் சலாஹுத்தீன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்வதோடு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னாள் உறுப்பினரும், இந்தியன் லோக்சபாவின் தேசிய தலைவருமான பேராசிரியர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம், காலைக்கதிரின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரன் ஆகியோர் நிகழ்வில் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் ஏ.எல்.எம்.அதவுல்லாஹ், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முஜிபுர் ரஹ்மான், மர்ஜான் பழீல், இம்ரான் மஹ்ரூப், அலி சப்ரி ரஹீம், முன்னாள் பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவுத், கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் எம்.ரி.எம் இக்பால், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி, சிலாபம் நகர சபை பிரதி மேயர் சாதிகுல் அமீன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் 
இந்தியாவிலிருந்து பிளாக் துளிப் குரூப் கம்பெனியின் தலைவர் முஹம்மது எஹியா, பிரபல தொழிலதிபர் டாக்டர் சதக் அப்துல் காதர், இலங்கை - இந்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.சாகுல் ஹமீத், தமிழ்நாடு ஆர்.டி.பி கல்வி நிறுவனங்களின்  தலைவர் டாக்டர் தாவூது பாட்ஷா, தமிழ்நாடு ஏ.கே. தங்க மாளிகை குரூப் உரிமையாளர் டாக்டர் ஏ. முஹம்மது அலி ஜின்னா, தமிழ்நாடு மெளலவி சையது அபுதாஹிர் மிஸ்பாஹி, சென்னை நியூ ராயல் ட்ரேடர்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர் மடுவை பீர் முஹம்மது
ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் முஹம்மது ரசூலுல்டீன், வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீ கஜன், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், தமிழன் பிரதம ஆசிரியர் சிவராஜா, தினக்குரல் பிரதம ஆசிரியர் ஆர். பி. ஹரன் தமிழ்மிரர் பிரதம ஆசிரியர் ஏ. கனகராஜா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் ஆலோசகர் எம். இஸட். அஹமட் முனவ்வர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன முஸ்லிம் பிரிவுப் பொறுப்பாளர் எம். கே.எம். யூனுஸ், இலங்கை ரூபவாஹிக் கூட்டத்தாபன தமிழ் செய்திப் பிரிவு உதவிப் பணிப்பாளர் சி.பி.எம். சியாம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபன முஸ்லிம் சேவைப் பொறுப்பாளர் ரினோஸியா ஜெளபர், வசந்தம் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் சித்திக் ஹனிபா ஆகியோர் ஊடக அதிதிகளாகவும் கலந்து கொள்கின்றனர்.

 நூலின் சிறப்பு பிரதிகள் பெறுவோர்:

ஹமீடியாஸ் குரூபின் முகாமைத்துவ பணிப்பாளரும் தலைவருமான பௌசுல் ஹமீத், லேன்ட் மார்க் பணிப்பாளர் எம்.ஏ.சி. மஹ்சூம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அர்கம் நூராமித், பாகிஸ்தானுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம் ஷஹீத், சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் தலைவரும் ஈரானுக்கான முன்னாள் இலங்கை தூதுவருமான ஒமர் காமில், பாகிஸ்தானுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் பௌசான் அன்வர், சிரேஷ்ட சட்டத்தரணி யூ.எம்.நஜீம், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய தலைவர் இஹ்ஸான் ஏ ஹமீத், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தேசிய தலைவர் லுக்மான் சஹாப்தீன், அஸீஸ் மன்றத் தலைவர் அஷ்ரப் அஸீஸ், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர்  சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், தேசிய சூரா கவுன்சில் பொதுச்  பொதுச்செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி ஜம்இய்யதுஷ் ஷபாப் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் முன்னாள் தேசிய தலைவர் தேசகீர்த்தி ஷஹீத் எம்.ரிஸ்மி, அமானா வங்கி முதலீட்டுப் பிரிவு முகாமையாளர் எம்.ஏ.எம்.நியாஸ், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் முன்னாள் தேசிய தலைவர் காலித் எம்.பாரூக், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் மகளிர் பிரிவு தலைவி பவாஸா தாஹா, அமஸோன் கல்லூரி பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.சி.எம் முனீர், அரசியல் ஆய்வாளர் / எழுத்தாளர் பேராசிரியர் சதீஷ்குமார் சிவலிங்கம், அகில இலங்கை சூபி தரீக்காவின் உயர்பீடத்தின் தலைவர் அஸ்ஸெய்யத் நகீப் மௌலானா, தெவட்டகஹ ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் ரியாஸ் சாலி, ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹஸன், ஒக்ஸ்போர்ட் எலிவேட்டர்ஸ் கம்பெனி (தனியார்) லிமிட்டட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் அகமத் கே. ராஜா, ஜெம் லைட் ஜுவலர்ஸின் உரிமையாளர் ஏ.ஆர். ஹுசைன் அஹமத், ஐவே கெம்பஸின் பணிப்பாளர் பௌஸர் பாரூக், ஜெனரல் எக்யூப்மென்ட் பணிப்பாளர் எம். சதுர்டீன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொருளாளர் டாக்டர் மௌலவி அஸ்வர் அஸ்ஹரி, தொழிலதிபர் இஹ்ஸான் வாஹித், பொன்மனச் செம்மல் கவிஞர் தாஜ்மஹால், தமிழ் தென்றல் அலி அக்பர், தொழிலதிபர் எம்.எஸ்.எம். ஜின்னா,  கவிஞர் ரவூப் ஹஸீன், டாக்டர் எச்.எம் ரபீக், இத்திஹாத் அஹ்லுஸ் ஸுன்னாவின்  தலைவர் டாக்டர் பஹ்மி இஸ்மாயீல், சீனன்கோட்டை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பொருளாளர் சப்வான் நயீம், சீனன்கோட்டை ஹழரா ஜமாஅத்தின் உபதலைவர் பர்ஹான் ரபா,  சீனன்கோட்டை ஜாமிஅதுல் பாஸியா கலாபீடத்தின் பொருளாளர் முஸ்னி உவைஸ், ஒக்ஸ்போர்ட் எலிவேட்டட் கம்பெனி (தனியார்) லிமிடட்டின் முகாமையாளர் எம்.ரொஷான் அக்தார், தெஹிவளை ஏ.எம். சம்சுதீன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எம். அஸாருதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொருளாளர் அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ், தொழிலதிபர் ஜௌபர் ஷஹீத் ஆகியோர் நூலின் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொள்வதோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஷிஹார் அனீஸ் நன்றியுரையும் நிகழ்த்துவார் என போரத்தின் தலைவி புர்கான் பீ. இப்திகார் தெரிவித்தார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.