குண்டசாலை தொல்பொருள் காப்பகத்தின் ஆயிரம் கிலோ நினைவுச்சின்னம் திருட்டு

குண்டசாலை உடமல்வ தொல்பொருள் காப்பகத்தில் இருந்த ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட ‘சந்திர வட்டக் கல் ‘ எனப்படும் தொல்பொருள் நினைவுச்சின்னம் நேற்று (டிச.14) திருடர்களால் திருடப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் பல்லேகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. குண்டசாலை உடமால்வ தொல்பொருள் காப்பகத்தில் இருந்த இந்த நிலவுக்கல் கி.பி.1707 முதல் 1739 வரை 32 ஆண்டுகள் நாட்டை ஆண்ட ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திரசிங்க மன்னனின் அரச மாளிகையில் இருந்ததென்று கூறப்படுகிறது.

கருத்துகள்