முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்­தங்கள் தொடர்­பான இறு­தித்­தீர்­மானம் விரைவில் எட்­டப்­ப­ட­வுள்­ளது. சட்­ட­வ­ரைஞர் திணைக்­களம் நகல் சட்ட வரை­பினைத் தயா­ரித்­துள்­ளது. இச்­சட்­ட­வ­ரைபு நீதி­ய­மைச்­ச­ரினால் அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை நீதி சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, அர­சியல் சீர்தி­ருத்த அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ இன்று பாரா­ளு­மன்றில் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ளார். இதற்­கான அழைப்பு அமைச்­ச­ரினால் விடுக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்பில் அமைச்சர் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கருத்­து­களைக் கேட்­ட­றி­ய­வுள்ளார்.

முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­சப்­ரி­யினால் இச்­சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஆலோ­ச­னைக்­குழு ஏற்­க­னவே தனது அறிக்­கையை தற்­போ­தைய நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளித்­துள்­ளது. வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீனின் தலை­மையில் இக்­குழு நிய­மிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

நீதி­ய­மைச்­சரின் தலை­மையில் பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் இன்று இடம்­பெ­ற­வுள்ள இக்­கூட்­டத்­துக்கு சட்­டத்­தி­ருத்த ஆலோ­ச­னைக்­கு­ழுவின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீனும் பெண் சட்­டத்­த­ர­ணி­களும் அழைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வி­வ­கரம் தொடர்பில் ‘விடி­வெள்ளி’ முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சில­ரிடம் கருத்து வின­வி­யது,

 ரவூப் ஹக்கீம்
‘ஒரு தசாப்த காலத்­துக்கும் மேலாக, முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்­தங்கள் இழு­ப­றியில் இருக்­கி­றது. 2009 ஆம் ஆண்டு அப்­போது நீதி­ய­மைச்­ச­ராக இருந்த மிலிந்த மொற­கொ­டவினால் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது.

நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட இக்­குழு இரு­பி­ரி­வாக பிள­வு­பட்டு இரு­வேறு அறிக்­கை­களை நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நீதி­ய­மைச்­ச­ராக இருந்த தலதா அத்­து­கோ­ர­ல­விடம் கைய­ளித்­தது. இக்­கு­ழுவில் ஐந்து விடயங்களில் முரண்­பா­டுகள் நில­வின. அன்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் ஆராய்ந்து கருத்­து­களை தெரி­வித்தோம்.

பின்பு, முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­ச­வினால் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி செய­ல­ணி­யான ‘ஒரே­நாடு ஒரே­சட்டம்’ மற்றும் அத்­து­ர­லிய ரதன தேரரினால் பாரா­ளு­மன்­றத்தில் காதி­நீ­தி­மன்ற முறை­மையை ஒழிப்­ப­தற்கு முன்­வைக்­கப்­பட்ட தனி­நபர் பிரே­ரணை என்­பன மக்கள் மத்­தியில் சந்­தே­கங்­களை உரு­வாக்­கி­யது.

இத­னை­ய­டுத்து நீதி­ய­மைச்­ச­ராக இருந்த அலி சப்ரி திருத்­தங்கள் தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் ஆலோ­ச­ணைக் ­குழு­வொன்­றினை நிய­மித்தார். அக்­குழு சிபா­ரி­சுகள் அடங்கிய ஆலோ­ச­ணை­களை வழங்­கி­யுள்­ளது.

தற்­போது பெரும்­பா­லான விட­யங்­களில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டு­விட்­டது. பெண் காதி நிய­மனம் தொடர்­பிலும் முடிவு எட்­டப்­பட்­டுள்­ளது. ஆனால் சில விட­யங்­களில் சர்ச்சை நில­வு­கி­றது. காதி நீதி­மன்­றங்கள் தொடர்பில் சர்ச்சை நில­வு­கி­றது. இணக்கம் எட்­டப்­ப­டாத விவா­க­ரத்து விண்­ணப்­பங்­களை சிவில் நீதி­மன்­றங்­களில் விசா­ரிப்­பதா? என்­பதில் சர்ச்சை உரு­வா­கி­யுள்­ளது.முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கிய நாம் இது தொடர்பில் ஆராய்ந்து தீர்­மா­னிப்போம்.

காதி நீதி­மன்­றங்கள் தொடர்பில் அதி­ருப்தி வெளி­யி­டப்­ப­டு­கி­றது. பல குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. அவற்றை எவ்­வாறு சரி செய்­யலாம் என ஆரா­ய­வேண்டும். வை.எம்.எம்.ஏ. இச்­சட்டத் திருத்தம் தொடர்பில் சிறந்த ஆலோ­ச­னை­களை முன்­வைத்­துள்­ளது. பெண்­களின் குற்­றச்­சாட்­டு­களும் கவ­னத்­திற்­கொள்­ளப்­பட வேண்டும். காதி நீதி­மன்­றங்கள் மீதான நீதிச் சேவை ஆணைக்­கு­ழுவின் கண்­கா­ணிப்பு போதாது.

மொத்­தத்தில் இச்­சட்டத் திருத்­தங்கள் தொடர்ந்தும் இழுத்­த­டிக்­கப்­படக் கூடாது. அடுத்த வருடம் முற்­ப­கு­தி­யி­லேனும் இத்­தி­ருத்­தங்­களை நாம் அமு­லாக்கிக் கொள்ள வேண்டும் என்­பதில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தீவி­ர­மாக இருக்­கிறோம் என்றார்.



ரிஷாட் பதி­யுதீன்

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் கருத்து தெரி­விக்­கையில்,

‘எம்­மி­டையே பல்­வேறு கருத்து முரண்­பா­டுகள் இருந்­தாலும் இவ்­வி­ட­யத்தில் நாம் அனை­வரும் ஒரே நோக்­கோடு ஒன்­று­ப­ட­வுள்ளோம். திருத்­தங்கள், இஸ்­லா­மிய வரை­ய­றைக்குள், நாட்டின் சட்­டங்­க­ளையும் மதித்து அமைய வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யாக இருக்­கிறோம்’ என்றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர்

எம்.எஸ்.தௌபீக்

‘நீதி­ய­மைச்­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நாம் ஒரே கருத்­தி­னையே முன்­வைக்­க­வுள்ளோம். பெண் காதி நிய­மனம் தொடர்பில் நாம் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. காதி நீதி­மன்­றங்கள் மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும். காதி­க­ளாக தகு­தி­யா­ன­வர்கள் நிய­மிக்­கப்­பட வேண்டும். அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ என்றார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.