மாவனல்லை ஸஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு "ஸஹிரா நடைபவணி" 2022.12.11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் விழாக்கோலமான முறையில் மாவனல்லை நகரை வலம் வந்தது .

பழைய மாணவர்களின் உயரிய ஒத்துழைப்புடன் நடந்தேறிய இவ்நடைபவணியில் குதிரை யானை உட்பட பலரகவாகனங்கள் ,விநோத ஆடைகளில் கண்கவர் பொம்மை ஆடை தாங்கிய மனிதர்கள் என இன்னோரன்ன சுவாரஷ்ய நிகழ்வுகள் மாவனல்லை நகரை வலம் வந்து ஸஹிராத்தாயின் பெருமையை உலகுக்கு பறைசாற்றிது எனலாம் .

நாலாபக்கங்களிலும் வந்து கல்விகற்ற கல்லூரித்தாயின் மாணவர்கள் ஒன்று சேர கொண்டாடிய இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இலங்கையின் அதிநீளமான பாடசாலைக்கொடி என்ற பெருமையை சுமந்த ஸஹிராத்தாயின் 250 மீற்றர் நீளமான பாடசாலைகொடி கல்லூரியின் 83 ம் batch இனால் தயாரிக்கப்பட்டு 100 ஸஹிரா மாணவர்கள் சுமந்து சென்று வரலாற்றுச் சாதனை படைத்தமை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய விடயமாகும்.

தகவல் : பின்த் அமீன்




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.