நாளை முதல் மூன்றாம் தவணை ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை (5) ஆரம்பமாகவுள்ளது.

 மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை முதல் மார்ச் 24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு மத்தியில் க.பொ.த. உயர்தர பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இதற்காக ஜனவரி மாதம் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.