விபத்தில் காயமடைந்த இரண்டு வேன்களிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 12 பேர் சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து தெல்தோட்டை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.