பன்வில பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மடோல்கெலே ஊடாக பன்வில நோக்கிச் சென்ற போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று நேற்று (20) பிற்பகல் விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் காயமடைந்துள்ளனர்.


விபத்தின் போது பேருந்தில் 28 பேர் பயணித்துள்ளனர். இதில் 16 பெண்களும் 4 ஆண்களும் காயமடைந்து மடோல்கெலே பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


07 பெண்களும் ஆண் ஒருவரும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.