24 வயது இளைஞன் படுகொலை! மிதிகம பகுதியில் பயங்கரம்!

TestingRikas
By -
0

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகம பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலில் 24 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் உள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை இன்று (12) நடைபெறவுள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)