கம்பஹா, நால்ல – லோலுகொட பிரதேசத்தில் வசிக்கும் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்திய நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

எனினும் விஷம் குடித்த நிலையில், கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயதான சிறுவன் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், எட்டு வயதான மற்றைய பிள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.