பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த நபர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது செய்துள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை (24) மாலை நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியேட்டர்  வீதியில் வைத்து சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்பதோடு, சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் 1 கிராம் 50 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.

  

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.