கட்டுமானத் துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நிலுவையில் உள்ள  பற்றுகளுக்கு விரைவாக பணம் செலுத்துவதற்கான படிகள்...  
திறைசேரியில் இருந்து பெறப்படும் தொகைக்கு ஏற்ப அவை தவணை முறையில்  செலுத்த அமைச்சரவையின் கவனத்திற்கு... 

- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

கட்டுமானத் துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் உள்ள அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நிலுவையில் உள்ள பற்றுகளுக்கு உடனடியாக செலுத்த  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டும் பொழுது திறைசேரியில் இருந்து பணம் கிடைப்பதற்கு ஏற்ப அவை பகுதி பகுதியாக செலுத்தப்படுவதற்கு அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.

கட்டுமானத் துறையில் சேர்ந்தவர்களை பாதுகாக்க முடியாவிட்டால்,  இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நாம் பல பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின்  அதிகாரிகள் குழுவுடன் இன்று (23) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

மேலும்  அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது:

"நாடு பூராகவும் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அனைவரும் வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்து அழைத்து வர  ஒரு திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு தேவையான நிதி ஆலோசனைகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். வங்கியில் கடன் பணத்தைச் செலுத்த முடியாமல், இந்த நேரத்தில் அவர்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக அவர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த முதன்மை கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திறைசேரியில் இருந்து பெறப்படும் தொகைக்கு ஏற்ப அவற்றை தவணை முறையில் செலுத்த அமைச்சரவை  கவனம் செலுத்தியுள்ளது. அவர்களுக்கு கட்டுமானத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் அருகிலுள்ள நாடுகளில் உள்ள திட்டங்களுக்கு பரிந்துரைக்கப்படுவதோடு வனக் கொள்கைகளை கூட திருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தங்களது நிபுணத்துவ அறிவையும் இயந்திரங்களையும் இந்தத் துறையில் அவர்களுக்குப் பயன்படுத்த முடியுமாக இருக்கும். அதன் மூலம் அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவதோடு, அவர்களின் தொழிலைப் பாதுகாக்கவும்  முடியும்.

13 இலட்சத்திற்கு அண்மித்த தொழிலாளர்கள் அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. வழக்கமான தொழில் துறையிலிருந்து விலகி வேறு தொழில் துறைக்கு அல்லது வேறு முதலீட்டு முயற்சிகளின் ஊடாக அந்த வளங்களைப் பயன்படுத்தி வேறு தொழில்களுக்கு ஈடுபடுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள்  இந்த நேரத்தில்  கவனிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அது நமது கடமை. அதன்படி, அதற்கு எம்மால் செய்யக் கூடிய அத்தனை முயற்சிகளையும் எடுப்போம.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.