முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  புதிய பணிப்பாளராக செய்னுல் ஆப்தீன் முஹமட் பைஸல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிருவாக சேவையின் முதல்தர அதிகாரியான இவர் கமநல சேவைத் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும் கேகாலை மாவட்ட ருவன்வெல்ல மற்றும் கலிகமுவ பிரதேசச் செயலகங்களில் உதவிச் செயலாளராகவும்இ அரநாயக்க பிரதேச செயலாளராகவும் உயர் பதவிகளை வகித்த இவர் இன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  புதிய பணிப்பாளராக அவர் உத்தியோக பூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது உதவிப் பணிப்பாளர்களான அன்வர் அலி அலா அஹமட். நிருவாக உத்தியோகத்தர் திருமதி மிர்சியா தாஜூதீன் உள்ளிட்ட திணைக்கள அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.