கண்டி- புனித சில்வெஸ்டர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்துக்கு பொறுப்பான பாதுகாப்பு ஊழியர் ஒருவர், கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று(17) அதிகாலை 5 மணியளவில் மைதானத்துக்கு வருகைத் தந்த பாடசாலை மாணவன் ஒருவர் பாதுகாப்பு ஊழியர் கை, கால் கட்டப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு ஏனையவர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த பொலிஸார் இவரது கொலைக்கான காரணம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.