மீண்டும் வரிசையை எதிர்பாருங்கள் !
கஞ்சன விஜேசேகரவின் மற்றுமோர் எச்சரிக்கை!

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்துக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் கட்டண திருத்தம் செய்யப்பட்ட பின்னர் இலங்கை மின்சார சபைக்கு மாதாந்தம் சுமார் 35 பில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு மட்டும் மின்சார விநியோகத்துக்காக நிலக்கரிக்கு 38.45 பில்லியன் ரூபா தேவைபடுகின்றது.

இந்த நிலையில் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை ஏப்ரல் 25ஆம் திகதிக்கு முன்னதாகக் கொள்முதல் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் மீண்டும் வரிசைக்கு செல்ல வேண்தீய துர்ப்பாக்கிய நிலை உருவாகும் அல்லது மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளமையம் இங்கு  குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.