அஷ்ரப் ஏ சமத்-
இலங்கைக்கான மலேசிய தூதரக அலுவலகம் கொழும்பு பான்ஸ் பிலேஸில் திங்கட்கிழமை(02) திறந்து வைக்கப்பட்டது.
மலேசிலியாவிலிருந்து வருகை தந்த மலாக்கா ஆளுனா் தத்டோ டொக்டா் மொஹமட் அலி மொஹமட் ரஸ்டான் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மலேசியா நாட்டின் இலங்கைக்கான துாதுவா் தத்தோ டான் யங்தாய் மலே சமூகத்தின் இணைப்பாளா் எம்.அன்வா் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதேநேரம் மலே சமூகத்தினரின் சந்திப்பு ஒன்றும் கொழும்பு ஜெயிக்கா ஹில்டனில் நடைபெற்றது. அதிதியாக சுற்றாடல்துறை அமைச்சா் நசீர் அஹமட் கலந்து கொண்டார்.
கருத்துரையிடுக