Kahatowita மண்ணின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழா இன்ஷா அல்லாஹ் இன்று (29 January 2023) பிற்பகல் 1.30 மணிக்கு கஹடோவிட பொது மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தொடர் நிறைவடைந்த பின் பல சமூகப் பணிகளை செய்து வரும் KPL Foundation அமைப்பானது இம்முறை பிரதான அனுசரணையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க Say No to Drugs @ Kahatowita என்ற போதைக்கு எதிரான தொனிப்பொருளுடன்  தொடரை ஆரம்பிக்கின்றது.

2012ம் ஆண்டு எட்டு அணிகளுடன்  கம்புறாகல்ல பாடசாலை மைதானத்தில் தனது  பயணத்தை ஆரம்பித்தது KPL தொடர்.
ஒவ்வொரு வருடமும் இலங்கை சுதந்திர தினத்தை மையமாக வைத்து நடைபெறும் இந்தத் தொடர் படிப்படியாக வளர்ந்து இவ்வருடம் மொத்தமாக 19 அணிகளின் பங்களிப்புடன் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

264 வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த வருடத்துக்கான தொடரில் மொத்தமாக 35 போட்டிகள் நடைபெற உள்ளதுடன் முறையே 40 வயதுக்கு உட்பட்ட மற்றும் 40 வயதின் மேல் என்ற பிரிவு அடிப்படையில் இரண்டு சாம்பியன் கிண்ணங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கான பரிசுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏலவே போட்டிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்க அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் நபவிய்யா தரீக்கா இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மதியம் 1.30மணிக்கு முதல் போட்டி ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.

இவ் வருடத்துக்கான முதல் போட்டியில் அனுபவம் வாய்ந்த Risvi தலைமையிலான Central stallion அணியை எதிர்த்து  Kurawalana Eagles தனது புதிய தலைவரான Nasrin வழிகாட்டலில் களமிறங்குகிறது.

Central stallion தலைவர் Risvi சில மாதங்களுக்கு முன் நடந்த Kahatowita gathering fiesta தொடரில் Jaffna stallion  அணியை 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் உதவியுடன் மிகச் சிறப்பாக வழிநடாத்தி சாம்பியன் பட்டம் வென்றவர் என்பதை இங்கு நினைவு கூறத்தக்கது.
(நன்றி -முபீன் )

Afham Nizam.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.