தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 

சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவான நிலையில், 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. 

இதனையடுத்து, 3வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. 4வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவு. 5வது நிலநடுக்கம் தஜிகிஸ்தான்- சீன எல்லை சின்ஜியாங்கில் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது. 

6வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. 

அதிகபட்சமாக 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். 

5.0, 4.6, 4.9, 4.8 மற்றும் 4.7 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

எனவே ,பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.